="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

15

பாட்டு
அதியமான் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வனவன்
மதிமிக்க பொகுட்டெழினி மணிமுடி தரித்திட்டான்
ஆண்டினில் மிகவிளைஞன் அறிவில் மிகுவினைஞன்
மாண்டதன் தந்தையைப்போல் வள்ளன்மை உள்ளத்தான்
அன்னவற்கு அரசியலில் அருந்துணையாய் ஒளவைநின்றார்
மன்னவனை வாயாரப் புகழ்ந்து பல பாப்புனைந்தார்
சில்லாண்டு கழிய அவர் செந்தமிழ் நாடுசுற்ற
நல்லார்வ மிகக்கொண்டு நயந்துவிடை தான்பெற்றார்
தன்னுடைய மலைநாட்டுத் தமிழ்வள்ளல் வள்ளுவனை
மன்னுபுகழ் நாஞ்சில்மலை மன்னவனை நண்ணியிட்டார்
வள்ளுவனே! சிறிதரிசி வழங்குக! நீ என்றிட்டார்
உள்ளமகிழ் வள்ளுவனோ ஓரானை உவந்தளித்தான்

நாஞ்சில்மலை வள்ளுவனை நாவாரப் பாடிநின்றார்
ஆய்ந்துபல நாள்நடந்து அரசர்களைக் காணலுற்றார்
கடையெழு வள்ளல்களில் கருத்தினிய வள்ளலவன்
படைமிகு மன்னனவன் பார்புகழ் அண்ணலவன்
பறம்புமலை யாளுமவன் பசித்தவர் குழுமவன்
அறம்பல செய்யுமவன் ஆருயிர்கட் கையனவன்
பாரியெனப் பாரவர்கள் பாராட்டும் பண்பனவன்
ஓரறிவு கொள்ளுயிர்க்கும் உவந்தருள் வள்ளலவன்
முல்லையிளங் கொடியினுக்கு முழுமணித் தேரளித்தான்
தொல்லையவன் புகழதனைச் சொல்லாத நூல்களில்லே
இத்தகைய வள்ளல்தனை இயலவ்வை அடைந்திட்டார்
வித்தகங்ற் செல்வியினை விழைந்துவர வேற்றிட்டான்
பரிசுகள் பலவழங்கி அரியதமிழ் கேட்டிட்டான்
அரியவரைப் பிரிவதற்குப் பெரிதுமே வருந்தியிட்டான்.
பலகாலும் வந்தவ்வை பைந்தமிழை யூட்டிகின்றார்
அலகில்லா அன்புடனே ஒருசமயம் அடைந்திட்டார்
வந்தவர்க்குச் சிந்தைமகிழ்ந் தரும்பரிசு வழங்கிட்டான்
புந்திமகிழ்ந் தவ்வையாரும் புறப்பட்டார் வழிநடந்து
காட்டுவழிச் செலும்போது கள்ளர்பலர் மறித்திட்டார்
கூட்டாக அவர்பொருளைக் குலைந்திடக் கவர்ந்திட்டார்
பரிசுகளை இழந்திட்ட பசுந்தமிழ்ச் செல்வியவர்
பெரிதுமனம் வாடிமிகப் பெட்புறுபாரியைக் கண்டார்
பேரறமே உருவான பாரிவள்ளால் நின்னுட்டில்
சாரும்வழி தான்மறித்துத் தந்தபொருள் பறித்திட்டார்
உன்னுடைய திருநாட்டும் உள்ளாரோ கள்ளர்பலர்
என்னவியப்பு! ஐயையோ! ஈதோ உன் னைட்சிமுறை!
இந்தவிதம் முறையிட்ட செந்தமிழர் தம்தவத்தை
வந்தித்து வாழ்த்தியவர் சிந்தையது குளிர்வித்தான்
கலைவாணித் திருவுருவே! கற்றவர்கள் நற்றவமே!

நிலையான நும்கவிதை நீடுபுகழ் நாடிதனில்
கள்ளர்கள் யாருமில்லை யானே அக் கள்வனவன்
தள்ளரிய நும்பிரிவு தாங்கரிய பெருந்துன்பம்
தந்ததனைல் நந்தம்மைத் தடுத்துமறித் திடச்செய்தேன்
இந்தவித மன்றியுமை இங்குமீண் டழைப்பரிதே
என்றெண்ணிச் செய்திட்டேன் நன்றுபொறுத் திட்டருளும்
கன்றுமணம் ஆறியெனைக் கனிந்தினிது வாழ்த்து மென்றான்
பாரியவன் பேரன்பைச் சீருறவே தாமறிந்தார்
நேரில்லா அவனருளை நினைந்துநினைங் தின்புற்றார்.

வசனம்
ஒளவையாரிடம் போன்புகொண்ட பாரியைப்போலப் பற்பலர் அந்தக்காலத்தில் செந்தமிழ் நாட்டிலே இருந்தார்கள். பழையனூர் என்னும் ஊரிலே வாழ்ந்த உத்தம வேளாளன் ஒருவன் சிறந்த அருள்வள்ளல். நிறைந்த தமிழறிஞன். காரியென்னும் பேருடையான். நேரில்லாச் சீருடையான். அன்னவனும் நம் தமிழ் மூதாட்டியாகிய ஒளவையாரிடம் அளவற்ற அன்புகொண்டிருந்தான். ஒளவையார் ஒருசமயம் அவனிடம் சென்றார். சிலநாள் அவனது மனையில் விருத்தாளியாக இருந்து மகிழ்ந்தார். ஓய்ந்த நேரமெல்லாம் ஆய்ந்த தமிழ்க்கவியால் அவனை மகிழ்வித்தார்.

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, Creative Commons has waived all copyright and related or neighboring rights to , except where otherwise noted.