5
தமிழ்நாடு செய்ததீ வினையால்
தண்டமிழ்ப் புலவர்கள் வாழ்ந்த
தக்கவர லாறேதும் காணோம்
அமிழ்தென்ன அவர் தந்த பாடல்
அவைகண்டு வரலாறு நாடல்
ஆராய்ச்சி யாளர்க்குக் கேடில்
ஒளவையின் பெற்றோரைப் பற்றி
அறிதற்கு வழியில்லே சுற்றி
ஆராய்வோம் நாமதைப் பற்றி
செவ்வையாய் நோக்குவார் தெரிவார்
செந்தமிழ்ப் பலநூல்கள் அறிவார்
தேர்ந்துவரலாற்றினைப் புரிவார்