="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

10

பாட்டு
ஒளவையே அறிவுச்செல்வி அடியேனைப்
பொறுத்தல் வேண்டும்
செவ்வையாய் நுந்தம் அன்பைச் சிறக்கவே
பெறுதல் வேண்டும்
தண்டமிழ்ச் சுவையைஉம்பால் கண்டிட
வேண்டும் என்றே
கொண்டவோர் எண்ணத்தாலே பரிசிலைக்
கொடுக்க வில்லே
பரிசிலைக் கொடுத்துவிட்டால் பதியினைப்
பெயர்ந்து செலவீர்
விரைவினில் உம்மைப்பிரிய விரும்பிலேன்
ஆகை யாலே
காலத்தைத் தாழ்த்திவிட்டேன் கடுஞ்சினம்
கொள்ளல் வேண்டாம்
ஞாலத்தில் கற்றேர்தம்மைப் பிரிந்திட
நயப்பார் யாரே?
கற்றார்கூட் டுறவெங்காளும் களிப்பினை
நல்கும் மேலும்
வற்றாத தமிழின்பத்தை வழங்கிட
வேண்டும் தாயே!
இங்ஙனம் சொல்லிநிற்கும் வள்ளலின்
இதயம் கண்டார்

பொங்கிடும் அன்புவெள்ளம் புரண்டலை
மோதக் கண்டார்
ஐயைய்யோ யாதுசெய்தேன் அதியமான்
அன்பைக் காணேன்
வையகம் போற்றும்வள்ளல் வண்மையைக்
கண்டே னில்லை
ஒருநாள் இருநாளல்ல பலநாள்
செலினும் அன்னான்
மருவிடும் சுற்றமோடு பெருகவே
செலினும் வள்ளல்
தலைநாளைப் போலஅன்பு தந்துமே
தாங்கிக் காப்பான்
பலநாள் கழிந்திட்டாலும் பரிசுவிரைந்
தளித்திட் டாலும்
யானையின்கைக் கவளம்போல என்றுமது
தப்பா தையோ!
கோனவனாம் தமிழகவள்ளல் அதியமான்
குணமீ தையோ!
என்றுபுகழ்ந் திணிதேஏத்தி நன்றவனை
வாழ்த்தி யிட்டார்
அன்றுமுதல் பன்னாளவ்வை அவன்சபை
அமர்ந் திருந்தார்

 

வசனம்
அதியமான் அரசவைப் பெரும்புலவராய் விளங்கி, அவ் வள்ளலுக்கு வாய்த்த வேளையெல்லாம் வளமான தமிழ்ச்சுவையை யூட்டினார். அவனைத் தமிழமுதப் பெருங்கடலில் திளைக்குமாறு செய்தார். ஒளவையார் ஊட்டி வரும் தமிழமுதத்தைப் பருகிய அதியமான் அவரைக் கண்ணினைக் காக்கின்ற இமையைப்போல் காத்துவந்தான். ஒருநாள் அதியமான், தனது மலைநாட்டைச் சார்ந்த தமிழ் மலையாகிய பொதியமலையின் அரிய வளங்களைக் காணூம் வேணவாவுடன் தனது பரிவாரம் சூழச்சென்றான். மலை வளம் கண்டு மகிழ்ந்துகொண்டு, உல்லாசமாக வரும் வேளையில் தவமுனிவர் ஒருவரைத் தரிசித்தான். அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்தான். அவனது சிறந்த குணத்தை யறிந்த அருந்தவ முனிவர் அவனுக்கு ஆசி கூறினார்.

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, Creative Commons has waived all copyright and related or neighboring rights to , except where otherwise noted.