="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

27 யாருடைய புகழ் உயர்ந்தது!

26. யாருடைய புகழ் உயர்ந்தது!

சேரலாதன், புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருந்து மாண்டான். ஆன்றோர் பலர், அவனுடன் உயிர் துறந்தனர்.

குயத்தியார் எனும் பெண் புலவர், சேரலாதனின் சிறப்பைக் கண்டு வியந்தார். அவனை வென்ற பெருவளத்தானைத் தேடிச் சென்றார். அவன் குயத்தியாரை வரவேற்றான்.

“அரசே! நின்னைப் பாடுதற்கு வந்துள்ளேன்” என்றார் குயத்தியார்.

“பாடலாம்” என்றான் அரசன்.

“நின்னைப் பாடினால், அது, சேரனையும் பாடியதாகும். நின்னைப் புகழ்ந்தால், அது சேரனையும்
புகழ்ந்ததாகும்” என்று குயத்தியார் கூறினார்.

வடக்கிருந்து மாண்ட சேரலாதன் முகம், சோழன் மனக்கண் முன் பளிச்சிட்டது.

நின் கணை செய்த புறப் புண்ணுக்கு வெட்கப்பட்டு, வடக்கிருந்து மாண்ட சேரன், நின்னினும் புகழ் உடையவன் தானே! என்று கேட்டார் குயத்தியார்.

பெருவளத்தான் “விம்மி விம்மி” அழுதான்.

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, manarkeni has waived all copyright and related or neighboring rights to யாருடைய புகழ் உயர்ந்தது!, except where otherwise noted.

Share This Book