="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

96 “மரம்படுகிறுதி”

96. “மரம்படு சிறு தீ”

வேல் முனையால் நெற்றி வியர்வையைத் துடைத்து நின்று வெஞ்சினங் கூறினான் வேந்தன். பெண் கேட்க வந்தவன் அவன்.

மகட் கொடை மறுக்கும் தந்தையும் மறச் சொற்கள் கிளத்தினான்!

இது, போர் வரும் என்பதற்கு அறிகுறி! மன்னன் மகள் ஒடி வந்தாள்.

“அப்பா என்னால்தானே இவ்வளவு கேடு” என்றாள்

மன்னன், “பெண்ணே, பெரிய மரத்தில் பட்ட சிறு தீ, மரம் முழுவதையும் சுட்டெரிக்கும்! அதுபோல், இவ்வூரிற் பிறந்த சிறுமி நீ உன்னைத் துணைகொண்டு போர்த் தீ புகைகின்றது. அது, ஊரையே சுட்டெரிக்கப் போகின்றது” என்றான்.

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, manarkeni has waived all copyright and related or neighboring rights to “மரம்படுகிறுதி”, except where otherwise noted.

Share This Book