="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

87 கடல் மேல் எழும் கதிரவன் நீ!

87. கடல் மேல் எழும் கதிரவன் நீ

வெற்றிக்குக் கட்டியங் கூறி, குருதிக் கறை படிந்த வாட்கள் ஆயிரம் அவை, செவ்வானத்தின் வனப்புப் போன்றன!

கால்கள் ஒடுவதாலே கழல்கள் அறுந்து விழ்ந்தன… அவை, கொல்லேற்றின் கொம்பு போன்றன…

அம்பு பட்டதால் மார்புக் கவசங்களில் துளைகள் தோன்றின… அவை, இறந்து பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கும் இலக்கம் போன்றன…

பரிகள், வலமும் இடமும் பாய்ந்து, வாய்களிற் குருதி படிந்து, எருதைக் கவ்விய புலி போன்றன…

களிறுகள், கோட்டைக் கதவம் பிளந்து, கோடு முறிந்து, உயிர் உண்ணும் கூற்றுவன் போன்றன…

ஆனால் அவனோ தாவும் குதிரையொடு தகதகக்கும் தேர் ஏறிக் கருங்கடலில் ஞாயிறுபோற் காட்சி தருகிறான்.

அவன் தேரோடு போராடும் பகைவர் வேரோடு பெயர்ந்து விழுவர்… தாயற்ற குழந்தை போற்கதறி அழுவர்

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, manarkeni has waived all copyright and related or neighboring rights to கடல் மேல் எழும் கதிரவன் நீ!, except where otherwise noted.

Share This Book